states

img

லக்கிம்பூர் வன்முறை: 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அஷிஷ் மிஸ்ரா பெயர் சேர்ப்பு

லக்கிம்பூர் வன்முறை விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அஷிஷ் மிஸ்ரா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது திட்டமிட்டு பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென தொடர்ந்து பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், லக்கீம்பூர் விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதில், ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்த போது  சம்பவ இடத்தில் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.